"வன்முறை தவிர்ப்போம் - போதை ஒழிப்போம்" விழிப்புணர்வு போராட்டம்..

ஆசிரியர் - Editor I

வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும், "வன்முறை தவிர்ப்போம் - போதை ஒழிப்போம்" என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வும் இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை யாழ்ப்பாண பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெற்றது. 

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,  யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்ணல்ட், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,  உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆகியோரின் உரைகளின் நிறைவில் "வன்முறை தவிர்ப்போம் - போதை ஒழிப்போம்" பிரகடனம் உறுதி செய்யப்பட்டது. 






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு