சர்வதேச மகளிர் தினத்தில் மாற்று திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு!

ஆசிரியர் - Editor I
சர்வதேச மகளிர் தினத்தில் மாற்று திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கைதடி விழிப்புலனற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவகத்தில் நேற்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா தலைமையில் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பாடல்கள் மற்றும் உரைகள் இடம்பெற்றதுடன் இராணுவத் தளபதியால் மதியநேர உணவு, 

காசோலை மற்றும் அன்பளிப்புச் பொருட்களும் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளான பெண்களை சமூகத்தில் முதன்மைப்படுத்தும் நோக்கில் கந்தசாமி கருணாகரனின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், 51 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி சந்தன விக்ரமரத்ன மற்றும் படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு