அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 25பேருக்கு நியமன கடிதம்..

ஆசிரியர் - Editor I
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 25பேருக்கு நியமன கடிதம்..

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக தேர்வாகிய 23 பேருக்கான நியமனக் கடிதங்களை  வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். 

இன்று (05) காலை 8.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் பிரதிபிரதம செயலாளர் நிர்வாகம்  திருமதி எஸ்.மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று 197 பேர் தேர்வாகியிருந்தனர். அவர்களில் 166 பேர் மட்டுமே பயிற்ச்சிக்கான கடமைகளை பெற்றிருந்தனர்.

 இந்த நிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆளுநரின் விசேட அனுமதியுடன் இந்த நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு