யாழ்.நாவாலி வடக்கில் அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாலி வடக்கில் அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்..

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள நடராசா அருள் ரொபின்சன் என்பவரது வீட்டிற்குள் 

இன்று 3:30 அளவில் நுழைந்த வாள்வெட்டு குழு ஒன்று குறித்த வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டாரக வாகனத்தின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு 

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டு உள்நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை 

இளைஞன் தப்பித்த நிலையில் குறித்த இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவரின் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றநிலையில் 

குறித்த குடும்பஸ்தரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் 

குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த பொலிஸார்,

குறித்த நபரை கைது செய்ததோடு வாளும் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இதனையடுத்து ஏனைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரியின் உதவியுடன் அடையாளப்படுத்தபடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதோடு 

மானிப்பாய் பொலிசார் நீதிமன்றின் தாக்குதல்தாரியை முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு