உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றம்!! -சர்வதேச போட்டிகளில் விளையாடவும் அதிரடி தடை-

ஆசிரியர் - Editor II
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றம்!! -சர்வதேச போட்டிகளில் விளையாடவும் அதிரடி தடை-

2022 உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ரஷ்யாவின் கால்பந்தாட்ட அணிகளுக்கு சர்வதேச போட்டிகளில் மறு அறிவித்தல் வரை பங்கேற்றுவதற்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பிபா எனப்படும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் என்பன இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்ய மற்றும் பெலருஸ் நாடுகளின் அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிளை, எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது சர்வதேச ஒலிப்பிக் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு