யாழ்.நகரை அண்மித்த இராசாவின்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்மித்த இராசாவின்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்.நகரை அண்டிய இராசாவின் தோட்டம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த சமயம் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகநபர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இராசாவின் தோட்டம் பகுதியில் நேற்றுமுன்தினம் 22ம் திகதி மாலை வீட்டில் தனிமையில் இருந்த குறித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த ஒருவரே கொலையை புரிந்திருக்கலாம் எனவும், 

கொலையின் பின் உயரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சந்தேகநபர் துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடும் மறைகாணி காணொளிகள் வெளியாகியிருந்ததுடன், 

பல்வேறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் புன்னாலை கட்டுவனை சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு