சர்வதேச ஊடகவியலாளர் தினம் யாழில் இன்று..

ஆசிரியர் - Editor I
சர்வதேச ஊடகவியலாளர் தினம் யாழில் இன்று..

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவுகூ ரப்பட்டுள்ளது.

மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந் நினைவுகூரல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான பிரதான அஞ்சலியை செலுத்தினார். தொடர்ந்து மாகா சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்கள் நினைவாக மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு