ஜே.வி.பியின் மே தினம் யாழில்.. த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
ஜே.வி.பியின் மே தினம் யாழில்.. த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்பு..

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தொழிலாளர் தின பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்பட பொது அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிதிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் ஆரம்பமான பேரணி கோயில் வீதி - வைத்தியசாலை வீதி - சத்திரச் சந்தியை அடைந்து கே.கே.எஸ் வீதி ஊடாக யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தை வந்தடைந்தது.

அங்கு தொழிலாளர் தினக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.












பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு