யாழ்.மாவட்டச் செயலகம் - A9 வீதி ஆகியவற்றை முற்றுகையிட்டு மீனவர்கள் மாபெரும் போராட்டம்!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் - கண்டி வீதியை முற்றுகையிட்டு இந்திய இழுவை படகுகள் அத்துமீறல்களை கண்டித்து கடற்றொழிலாளர்கள் இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்திவருகின்றனர். 

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவனை அமைப்புக்களின் ஏற்பாட்டில் 

இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து 

கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ்.மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, 

கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு