யாழ்.மாவட்டத்தில் 2வது மலோியா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 2வது மலோியா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த மேலும் ஒருவருக்கு மலோியா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கே தொற்று உறுதியானது. 

மல்லாகம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 15ம் திகதி மலோியா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 2வது நபருக்கும் தொற்று உறுதியானது. 

மேலும் குறித்த இரு மலோியா நோயாளிகளும் தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு