யாழ்.அச்சுவேலி பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் தொடர் முறைப்பாடு! திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்த DIG..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் தொடர் முறைப்பாடு! திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்த DIG..

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக பிரதேச மக்களினால் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கு அமைவாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் நிலையத்திற்கு நோில் திடீர் விஜயம் செய்துள்ளார். 

இதன்போது அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் யாழ்.மாவட்ட பொலிஸ் உயர் மட்டங்களிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் 

நேற்றைய தினம் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு