யாழ்.தென்மராட்சியில் பரவும் நெருப்பு காய்ச்சல்! சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் பரவும் நெருப்பு காய்ச்சல்! சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..

யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது. 

இந்த காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நீங்கள் உள்ளெடுக்கும் நீர் மற்றும் உணவு என்பவற்றின் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். 

கொதித்தாறிய அல்லது குளோறின் மூலம் பரிகரிப்பு செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்துங்கள், பாதுகாப்பாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை

கொள்வனவு செய்து உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் உடனுக்குடன் சமைத்த உணவை உண்ணுங்கள். 

சமைத்த உணவுகளை பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளுங்கள் சமைக்காது உண்ணும ் பழங்கள், பச்சை இலை வகைகள் என்பவற்றை 

நன்கு கழுவி உண்ணுங்கள், உணவு தயாரித்தல், பரிமாறல், மலசலகூட பாவனை ஆகியவற்றின் பின்னர் சவர்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்யுங்கள். 

நோய் அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்பன அந்த அறிவுறுத்தல்களாக உள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு