யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனையில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடி 3 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனையில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடி 3 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கைது..!

யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான ரவுடியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்ரெம்பர் மாதம் 23ம் திகதி நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குறித்த ரவுடி இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் 

நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு