பட்டம் விடுவதற்குச் சென்றிருந்த நிலையில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்!

ஆசிரியர் - Editor I
பட்டம் விடுவதற்குச் சென்றிருந்த நிலையில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்!

யாழ்.நெல்லியடி - திக்கம் பகுதியில் பட்டம் விடுவதற்காக சென்றிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பட்டம் விடுவதற்காக தனது சகோதரியுடன் அயல் காணிக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.

பட்டத்தை ஏற்றிய பின்னர் அந்தக் காணியிலிருந்த கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். 

சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை அவதானித்த சகோதரி உறவினர்களை அழைத்து சிறுவனை கிணற்றிலிருந்து மீட்டபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு