யாழ்ப்பாணத்தில் பூவரசு, வேம்பு விறகுகளுக்கு கடும் கிராக்கி! விலையும் உயர்ந்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பூவரசு, வேம்பு விறகுகளுக்கு கடும் கிராக்கி! விலையும் உயர்ந்தது..

யாழ்.குடாநாட்டில் விறகுக்கு திடீரென நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. தெற்கிலிருந்து காட்டு விறகு வராமையினால் இங்குள்ள வேம்பு மற்றும் பூவரசு விறகுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருப்பதாக விறகு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தொிவித்துள்ளனர். 

மேலும் விறகு விலையும் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. ஒரு கிலோ 15 ரூபாயாக விற்கப்பட்ட விறகு தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து வருவதாலும், சந்தையில் எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் மக்கள் விறகு பாவனையை நாடி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு