யாழ்.நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது! மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது! மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மீட்பு..

யாழ்.நவாலி பகுதியில் நேற்று முன்தினம் புதன் கிழமை வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் 

பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே 

இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு