யாழ்.சங்கானை - தொட்டிலடி பகுதியில் 19 வயதான இளைஞன் கைது, ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானை - தொட்டிலடி பகுதியில் 19 வயதான இளைஞன் கைது, ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது..

யாழ்.சங்கானை தொட்டிலடி சந்தியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், 

சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை கடத்திச் சென்றபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு