யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்! யாழ்.மல்லாகத்தை சேர்ந்தவர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்! யாழ்.மல்லாகத்தை சேர்ந்தவர்...

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்திற்குப் பின்னர் மலோியா காய்ச்சலுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். 

கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 

யாழ்.பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. 

தொற்றுக்குள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் 

மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் யாழ்.பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ. ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு