யாழ்.சங்கானையில் ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! பொருட்கள், வாகனங்கள் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! பொருட்கள், வாகனங்கள் சேதம்..

யாழ்.சங்கானை பகுதியில் நேற்றய தினம் இரவு 10 மணியளவில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் பொருட்களை உடைத்து, வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது. 

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

அக் கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியுள்ளது. முச்சக்கர வண்டியினை மூடியிருந்த பொலித்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலித்தீனை கீழே இழுத்து விழுத்தினர். 

இதனால் முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு