மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் தேக்கம், வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுகிறார் ஆளுநர்! பரபரப்பை கிளப்பியிருக்கும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் தேக்கம், வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுகிறார் ஆளுநர்! பரபரப்பை கிளப்பியிருக்கும் அறிவிப்பு..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நாளை மறுதினம் செவ்வாய் கிழமை வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

மாகாண பேரவை செயலக மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலமையில் இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேறகொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு வடமாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

மேற்படி கூட்டம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட 

இறுதி வாக்கெடுப்பு காரணமாக பிற்போடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு