யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் டிசம்பர் 15ல் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் டிசம்பர் 15ல் ஆரம்பம்!

யாழ்.மாவட்டத்திலிருந்து தனியார் போக்குவரத்து பேருந்துகளின் உள்ளூர் மற்றும் வெளியூர், துார பிரதேசங்களுக்கான இரவு நேர சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இடம்பெறவுள்ளது. 

குறித்த தகவலை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நேற்று மாலை அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.

அதே போல் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இறக்கப்படுவர்.இ.போ.ச பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வெளி மாவட்டங்களுக்கும்,  நீண்ட தூரத்திற்கும் பயணிக்கும் பேருந்துகள் 

ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரச் சந்தியை அடைந்து அங்கிருந்து கே.கே.எஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளி மாவட்டங்களுக்கான பயணத்தினை மேற்கொள்ளும் என்பதோடு, 

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இப் பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்குமுறையானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும், நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு