யாழ்.மீசாலையில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த ஆசிரியர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! 11 நாட்களின் பின் ஆசிரியர் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த ஆசிரியர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! 11 நாட்களின் பின் ஆசிரியர் மரணம்..

யாழ்.மீசாலை புத்துார் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 

மீசாலை வடக்கை சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லுாரி ஆசிரியரான கந்தசாமி சுதாஸ்கரன் (வயது35) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் வீதியை கடக்க மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 

வீதியில் காத்திருந்தபோது சாவகச்சோியிலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆசிரியர் மீது மோதியில் விபத்து இடம்பெற்றது. 

இதன்போது தலையின் பின்புறம் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 

11 நாட்களின் பின்னர் நேற்றய தினம் அவர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு