யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை..! வளமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை..! வளமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம். என வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மற்ற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் 

மேற்கண்டவாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு