யாழ்.தென்மராட்சியில் இரு பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் இரு பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன..!

யாழ்.சாவகச்சோி கல்வயல் மற்றும் கொடிகாமம் பகுதிகளிலும் நேற்றய தினம் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 

கல்வயலில் பாடசாலைக்கு புறப்படுவதற்காக ஆசிரியர் ஒருவர் சமையலில் ஈடுபட்டுக் கொண்டு தானும் தயாராகிக் கொண்டிருந்தபோது அடுப்பு வெடித்துள்ளது. 

அடுப்பு வெடித்து தீ சுவாலை எழுந்த நிலையில் வெளியே வைக்கப்பட்டிருந்த சிலிண்டருடனான இணைப்பை உடனடியாக துண்டித்ததால் தீ கட்டுப்படுத்தப்பட்டது, 

இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதேவேளை கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நேற்று எரிவாயு அடுப்பு வெடித்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு