யாழ்.மாதகலில் 276 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டமை கடற்படையின் பழிவாங்கலா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் 276 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டமை கடற்படையின் பழிவாங்கலா..?

யாழ்.மாதகல் கடற்பரப்பில் 276 கிலோ கஞ்சா பொதிகள் நேற்ற மீட்கப்பட்டிருந்தது இந்நிலையில் அவற்றை கடத்திவந்ததான குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் மாதகலில் கடந்தவாரம் கடற்டைபடையின் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராடியவர்கள் என கூறப்பட்டுள்ளதால் கடற்படையினரின் பழிவாங்கும் செயற்படாக இது இருக்குமா? என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். 

குறித்த இருவரும் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையிலேயே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு