தேசிய லொத்தர் சபை சீட்டிழுப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 பேருக்கு தலா 1 கோடி ரூபாய் பணப்பரிசு வென்றனர்..!

ஆசிரியர் - Editor I
தேசிய லொத்தர் சபை சீட்டிழுப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 பேருக்கு தலா 1 கோடி ரூபாய் பணப்பரிசு வென்றனர்..!

தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் 1 கோடி ரூபாய் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து குறித்த பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

இதில் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாவும், மெகா பவர் வெற்றிச் சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவும் கிடைத்துள்ளது. 

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர், 

பிராந்திய முகாமையாளர், அதிஸ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு