யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு வழங்கியுள்ள மக்கள் வக்கி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு வழங்கியுள்ள மக்கள் வக்கி..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மக்கள் வங்கியினால் 7.5 மில்லியன் பெறுமதியான அல்ட்றா சவுண்ட் ஸ்கானர் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை 9 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்பில் ஏற்கனவே கொழும்பு போதனா வைத்தியசாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் இந்த இயந்திரம் வழங்கப்பட்ட நிலையில் 

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு, 

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், 

வங்கி அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு