புதிய பேருந்து நிலையத்திற்கு போகமாட்டோம் என்கிறதாம் இ.போ.ச - மணிவண்ணன் தொிவிப்பு! ஆளுநர் தலையிட்டும் ஆனதொன்றுமில்லை, மக்கள் வரிப்பணம் தெருவில்..

ஆசிரியர் - Editor I
புதிய பேருந்து நிலையத்திற்கு போகமாட்டோம் என்கிறதாம் இ.போ.ச - மணிவண்ணன் தொிவிப்பு! ஆளுநர் தலையிட்டும் ஆனதொன்றுமில்லை, மக்கள் வரிப்பணம் தெருவில்..

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை. என இ.போ.ச விடாப்பிடியாக நிற்பதால் இன்றைய கூட்டம் முடிவின்றி முடிவுக்குவந்துள்ளது. 

மேற்கண்டவாறு யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறினார், யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் மத்திய புதிதாக அமைக்கப்பட்டது. 

ஆனாலும் அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருகிறது. இந்நிலையில் இ.போ.ச அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம். 

என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை கூட்டமொன்று இடம்பெற்றது.

இது தொடர்பாக இக்கூட்டத்தில் பங்குபற்றிய மாநகர முதல்வர் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர், நகர அபிவிருத்தி சபை, இலங்கை போக்குவரத்து சபை, 

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு