யாழ்.வடமராட்சி கிழக்கில் தமிழக மீனவரின் சாரதி அனுமதி பத்திரம் கரையொதுங்கியது! அண்மையில் கரையொதுங்கிய சடலங்களுடன் தொடர்புபட்டதா? பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் தமிழக மீனவரின் சாரதி அனுமதி பத்திரம் கரையொதுங்கியது! அண்மையில் கரையொதுங்கிய சடலங்களுடன் தொடர்புபட்டதா? பொலிஸார் விசாரணை..

யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதி பத்திரம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபருக்கு என்ன நடந்தது, சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மை நாட்களாக வடமராட்சி, வடமராட்சிகிழக்குப் பகுதிகளில் 5 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. 

இந் நிலையில் கரையொதுங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் அவருடைய முகவரி காலம்பாடி,சிதம்பரம், Kalampadi poChidambaram talukChidambaram cuddalcre tn 606602 என குறிப்பிட பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு