இருந்து நல்ல முடிவாக சொல்லிவிட்டு போங்கள்..! இ.பே.சபையினரை ஆளுநர் செயலகத்தில் இருத்திய ஆளுநர் ஜீவன் தியாகராஜா அதிரடி..

ஆசிரியர் - Editor I
இருந்து நல்ல முடிவாக சொல்லிவிட்டு போங்கள்..! இ.பே.சபையினரை ஆளுநர் செயலகத்தில் இருத்திய ஆளுநர் ஜீவன் தியாகராஜா அதிரடி..

யாழ்.மாவட்டத்திலிருந்து துார பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு தொடர்ந்தும் மறுத்துவருகின்றன. 

இந்நிலையில் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இ.போ.சபையினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் கலந்து கொண்டிருந்தார். 

இதன்போதும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. என கூறியிருக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா இருந்து நல்ல முடிவை சொல்லுமாறு கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.


அதேபோல் யாழ்.மாநகர முதல்வரும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையில் இ.பே.ச - தனியார் பேருந்து போட்டியால் தேடுவாரற்று கிடக்கும் நிலையில் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்ட ஒவ்வொன்றும்

மதிக்கப்படவேண்டும் தனிநபர்கள், குழுக்களின் சுயநலத்திற்காக அவற்றை தேடுவாரற்று விடமுடியாது என்பதை ஆளுநர் உணர்த்தியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு