யாழ்.சக்கோட்டை பகுதியில் சடலம் கரையொதுங்கியது! யாழ்.மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 5வது சடலம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சக்கோட்டை பகுதியில் சடலம் கரையொதுங்கியது! யாழ்.மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 5வது சடலம்..

யாழ்.குடாநாட்டில் ஒரு வாரத்தில் 5வது சடலம் இன்று சக்கோட்டை பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

ஒரு வாரத்தில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நான்கு சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.

இந்நிலையில், இன்று சக்கோட்டைப் பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கியுள்ளது.சடலங்கள் அனைத்தும் ஒரே வகையில் சிதைந்து காணப்படும் நிலையில் 

அனைத்தும் ஒரே சம்பவத்தில் உயிரிழந்தவர்களது சடலங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு