திடீரென முளைத்த சோதனைச் சாவடிகள்! - திருப்பி அனுப்பப்படும் பேருந்துகள்.

ஆசிரியர் - Editor I
திடீரென முளைத்த சோதனைச் சாவடிகள்! - திருப்பி அனுப்பப்படும் பேருந்துகள்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஆதரவாளர்களை ஏற்றிவரும் தனியார் பஸ்களை பொலிஸார் திருப்பியனுப்பிக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான சில இடங்களில், அந்த ஆதரவாளர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால், அவ்வாறான இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில இடங்களில் ஆதரவாளர்கள், வீதியில் படுத்து புரண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.  சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருக்கும் தங்களால், கொழும்புக்கு ஏன் செல்லமுடியாது?, அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்ன?  உங்களுடைய உயர்வுக்காகவும் போராட்டம் செய்வதற்காகத்தான், கொழும்புக்குச் செல்கின்றோம் என போலிசாரிடம் பஸ்களில் வந்தோர். சம்பளம்

 எனினும், மேலிடத்தில் கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமையவே தங்களால் செயற்படமுடியுமெனத் தெரிவித்த அதிகாரிகள், அவ்வாறான பஸ்களை அவ்விடத்தில் இருந்தே திருப்பியனுப்பிவிட்டனர்.  இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு