4 கிலோ 700 கிராம் போதைப் பொருளுடன் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாடசாலை மாணவன்..! வடக்கில் கொடிகட்டி பறக்கும் போதைப் பொருள் வியாபாரம்..

ஆசிரியர் - Editor I
4 கிலோ 700 கிராம் போதைப் பொருளுடன் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாடசாலை மாணவன்..! வடக்கில் கொடிகட்டி பறக்கும் போதைப் பொருள் வியாபாரம்..

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸரினால் 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் 4 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

மூர் வீதியைச் சேர்ந்த மாணவனே  4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார,

உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க உப பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையிலான குழுவினர் மேற்பட்ட கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,

குறித்த மாணவனையும் கைது செய்துள்ளனர். மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு