சுரேஸ் பிறேமச்சந்திரன் யார்? அவருடைய கொள்கை என்ன?

ஆசிரியர் - Editor I
சுரேஸ் பிறேமச்சந்திரன் யார்? அவருடைய கொள்கை என்ன?

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச் சினைகளை தீர்ப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தவறியுள்ளது. எனவே தமிழ்தேசியம் பேசு ம் கட்சிகள் ஒன்றிணையவேண்டும். என சுரேஸ் பிறேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசுகிறோம். 

இந்த சந் தர்ப்பத்தில் வேறு  எதனையும் பேச இயலாது என காரணம் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான காணி விடுவிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள், பௌத்தமய மாக்கல், மற்றும் காணாமல்போனவர்கள் பிரச்சினை, 

அரசியல் கைதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சி யை எடுக்கவில்லை. இந்நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் பின் னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

ஆக மொத்தத்தில் இப்போது புதிய அரசியலமைப்பும் இல்லை. தமிழ் மக்களுடைய அடிப்ப டை அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை என்ற நிலையில் தமிழ் மக்கள் நின்று கொ ண்டிருக்கின்றார்கள். 

இந்நிலையில் தமிழ் மக்களுடைய அடிப்படை அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக என்றாலும் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணையவேண்டியது அவசியம் எனவும், வெறுமேன 100வீதம் தூய்i மயாக இருப்பதாலோ? 

ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ? தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாது எனவும் கூறியிருந்தார். சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பை தொடர்ந்து நi டபெற்ற  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில்

மேற்படி தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டு தொடர்பில் சுரேஸ் பிறேமச்ச ந்திரன் விடுத்திருக்கும் அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்ப லத்திடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது,

சுரேஸ் பிறேமச்சந்திரனின் கோரிக்கையை நி ராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிறேமச்சந்திரனும் அவருடைய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் 100 வீதம் தமிழ்தேசியத்தை இறுக்கமாக கொண்டிருக்கவில்லை. என சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிந்தோ? அறியாமலோ? 

கூறியிருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் கட்சிகள் கூட்டாக இணங்கி செயற்படவேண்டும் என்பதற்கு முதலில் அடிப்படையான நம்பிக்கையை மற்றவர்களிடம் உருவாக்கவேண்டும். 

தூய்மையான அரசியலை செய்வதென்பது வேறு நடைமுறையில் மற்றவர்களிடத்தில் நம்பிக்ஐ கயை வளர்ப்பதென்பது வேறு இவற்றுக்கிடையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் கொள்கை என்ன? தேர்தலின் பின்னர் அவ ர்கள் கூட்டுசேர்ந்திருக்கும் கட்சிகள் எவை? 

என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு நகரசபையில் ஆட்சியமைப்பதற்காக எந்த கட்சியுடனும் சேர்வதற்கு தயாரான இவர்கள் எப்படித் தமிழ்தேசியவாத கட்சியாக இருக்க முடியும்? 

தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மற்றய கட்சிகளுடன் இணைந்து ஆட் சிய மைப்பதை தவறு என்று விமர்வித்தவர்களில் சுரேஸ் பிறேமச்சந்திரனும் உள்ள டக்கம். ஆனால் தான் யாரை விமர்சித்தாரோ? அவர்களை போன்றே நடந்து கொண்டவர் சுரேஸ். 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதனையும் மக்களுக்கு செய்யாது என்பதை நாங்கள் இன்றல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்த நாட்களில் இருந்து கூறிக்கொண்டிருக்கின்றோம். 

ஆனால் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைவு கொள்கைக்கான இணைவாக இருக்கவேண்டுமே தவிர, வெறுமனே தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்கவேண்டும் என்பதை மட்டும் 

இலக்காக கொண்ட கூட்டாக இருக்ககூடாது. கொள்கைக்காக மட்டும் நாங்கள் இணைய தயார் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு