16வயது, 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
16வயது, 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

வடமாகாணத்தில் 16வயது, 17 வயதான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் 25ம் திகதி ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் கோவிட்-19 தடுப்பூசி நாடளாவியரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.

அடுத்தகட்டமாக வடமாகாணத்தில் 16, 17 வயதுடையபாடசாலை மாணவரக்ளுக்கு பைஸர் கொவிட்-19தடுப்பூசியானது ஒருதடவை மாத்திரம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.

பாடசாலையை விட்டு விலகிய 16 தொடக்கம் 19 வயதுடையவரக்ளுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரிபணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்வதற்கு 16 தொடக்கம் 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை அன்றையதினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையில் சமர்ப்பித்து 

தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவரக்ளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையிலும், 

தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊரக்காற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் பிரதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் 

சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு