தமிழரின் கடல்வளத்தை அழிக்கும் இந்திய இழுவை படகு மீனவர்களை கண்டித்து கடல்வழி எதிர்ப்பு பேரணி..!

ஆசிரியர் - Editor I
தமிழரின் கடல்வளத்தை அழிக்கும் இந்திய இழுவை படகு மீனவர்களை கண்டித்து கடல்வழி எதிர்ப்பு பேரணி..!

இந்திய இழுவைப் படகுகள் சட்டத்தை அமல்படுத்த கோரியும், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும் முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையான படகு பேரணி ஆரம்பமானது.

கடல் வளத்தினை மிகமோசமாக அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்து வருகின்றது.

இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெறுகின்றது.

குறித்த படகு பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டுள்ளனர்.

2ம் இணைப்பு..

முல்லைத்தீவிலிருந்து புறப்பட்ட மீனவர் போராட்டப் படகுகள் பருத்தித்துறையை அடைந்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் தொடங்கிய மீனவர் போராட்டப் படகுகள் 

பருத்தித்துறை சற்று முன்னர் வந்தடைந்துள்ளன.அறுபத்துக்கும் மேற்பட்ட படகுகளில் பெருமளவான மீனவர்களும் அரசியல் பிரமுகர்களும் இணைந்து பயணித்தனர். கறுப்புக்கொடிகள் தாங்கியதாக குறித்த படகுகள் பயணித்தன.

பருத்தித்துறையில் கண்டன உரைகளும், மனுக் கையளிக்கும் நிகழ்வும் சற்று நேரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக 7மணிக்கு முல்லைத்தீவிலிருந்து புறப்பட்ட படகுகள் 2 அரை மணி நேரம் பயணித்து பருத்தித்துறையை அடைந்துள்ளன.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு