யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள் நிர்மானம் 2022 முற்பகுதியில் ஆரம்பம்! 185 ஏக்கர் நிலப்பரப்பை விட்டு கொடுக்கும் இராணுவம், அமைச்சரவை அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள் நிர்மானம் 2022 முற்பகுதியில் ஆரம்பம்! 185 ஏக்கர் நிலப்பரப்பை விட்டு கொடுக்கும் இராணுவம், அமைச்சரவை அனுமதி..

2022ம் ஆண்டு தொடக்கத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் நிர்மாணப் பணிகள் தொடங்கப்படும். என சீமெந்து கூட்டுத்தாபன தலைவர் காமினி எக்கநாயக்க கூறியிருக்கின்றார். 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலத்தை அங்கீகரிக்கவும், இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 185 ஏக்கர் நிலத்தில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல அழைப்பு விடுத்தும் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு 

அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, 100 க்கும் பழைய இயந்திரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளன. 

அதிகாரப்பூர்வமாக அந்த இடததில் இருந்து விலகிச் செல்லுமாறு இராணுவத்திடம் கூறவில்லை.என்றாலும், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வளாகத்தில் புதிய கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலை கட்டப்படும்போது அவர்கள் அங்கிருந்து வெளியேவார்கள் 

என்று இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சிமென்ட் நிறுவனம் ஆகிய இரண்டிற்கும் சொந்தமான வளாகங்கள் 

இராணுவத்தின் ஆதரவுடன் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு