போர் நிறைவடைந்து இத்தனை வருடங்களில் மக்களுக்கு குடிநீரை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் உரிமை பெற்றுக் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை!

ஆசிரியர் - Editor I
போர் நிறைவடைந்து இத்தனை வருடங்களில் மக்களுக்கு குடிநீரை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் உரிமை பெற்றுக் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை!

யுத்தம் முடிவடைந்த பின்னரும் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எமது மக்களின் குறைகளைத் தீர்க்காமல் சிலர் தொடர்ச்சியாக மனித உரிமைகளை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய அங்கஜன் இரமநாதன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்.தீவகத்தில் இடம்பெற்ற கடல்நரை நன்னீராக்கும் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்தும் தொடர்ச்சியாக தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகிறார்கள்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சாரத்தில் நாடு முழுவதும் சுத்தமான குடிநீரை வழங்குவேன் என சூளுரைத்து உள்ள நிலையில் அதனை நிறைவேற்றும் முகமாக பிரதமரின் பணிப்புரைக்கமைய வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தாளையடியில் இருந்து கடல் நீரை நன்னீராக்கி யாழ்ப்பாண மக்களின் 

குடிரை வழங்கல் தீவக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நயினாதீவில் கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆரம்பித்தமை மற்றும் யாழ் மாநகர பகுதிகளில் குழாய் நீர் பொருத்துதல் ஆகிய திட்டங்கள் நனவாகும் நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கிறோம். கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை 

நல்லாட்சி அரசாங்கம் தடுத்திருந்த நிலையில் தாளையடி திட்டத்தைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. தற்போதைய அரசாங்கம் கடந்தகால அரசாங்கங்களைபோல் அல்லாமல் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும் நிலையில் மக்களுக்கான அபிவிருத்திகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

ஆகவே சிலர் அரசியலில் பகல் கனவு காணகூடும் அதைப்பற்றி எமக்கு பிரச்சினை அல்ல மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் தருணம் அதுவே என் கனவு யாழ் என அங்கயன் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு