யாழ்.மாவட்டத்தில் 9 மாத பெண் குழந்தை உட்பட 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 9 மாத பெண் குழந்தை உட்பட 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் தொற்று தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 18 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 54 பேருக்குமாக மொத்தம் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 09 மாத பெண் குழந்தை ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 16314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 386 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு