மதுபோதையில் வந்து என்னை தாக்கினார், கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கினேன்! மனைவி வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் வந்து என்னை தாக்கினார், கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கினேன்! மனைவி வாக்குமூலம்..

யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றய தினம் இரவு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

படுகொலைதொடர்பாக இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 

சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதவான் அறிவுறுத்தினார். குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) 

என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார். அதேவேளை, கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு,

தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் வழமைபோன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு தன்னை தாக்கியபோது, 

தான் ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கிய போது , அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக 

பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு