இரா.சம்மந்தன்- சீ.வி.விக்னேஷ்வரன் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும்...

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தன்- சீ.வி.விக்னேஷ்வரன் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும்...

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் மனம் விட் டுப் பேச வேண்டும். என கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேசன் தமிழ் மக்களி ன் எதிர்கால நலன்களுக்காக இரு தலை வர்களும் இதனை செய்யவேண்டும் என வும் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இ ன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இ டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் க லந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியு ள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகை யில்,

யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை மு ன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் எ ன கூறுவார்கள். ஆனால் இது இன்று உண் டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அ ந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண் டாக வேண்டும்.

இங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம் பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உ ள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகி யவற்றை அடிப்படையாக கொண்டது.

ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தி ன் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில் லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தி ல் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவி ருத்தி பணிகள் இடம்பெறவில்லை.

அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக் கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மி குந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையை யும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம் மந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவரு க்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிரு க்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட் டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நா ன் கூறவரவில்லை.

இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்க ளின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.  மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அ கிம்ஷை வழியில் போராடினார்கள் பின்ன ர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுன் போராடி வருகிறார்.

அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலா ஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இ ருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தரு கிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமா ட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்ப ன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கி றேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு