யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 71 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 71 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 71 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 250 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையிலேயே 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் 71 பேருக்கு தொற்று. 

யாழ்.காரைநகரில் 34 பேருக்கும், சாவகச்சோியில் 19 பெருக்கும், பருத்தித்துறையில் 5 பேருக்கும், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் 3 பேருக்கும், 

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 3 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் 2 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேருக்கும். 

சங்கானையில் 2 பேருக்கும், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு