யாழ்.பருத்தித்துறை - முனை கடற்பகுதியில் கடற்படை சுற்றிவளைப்பில் இருவர் கைது! போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - முனை கடற்பகுதியில் கடற்படை சுற்றிவளைப்பில் இருவர் கைது! போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தகவல்..

யாழ்.பருத்தித்துறை முனை கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சந்தேகத்திற்கிடமான படகின் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையினர் படகை சுற்றிவளைத்த நிலையில் படகிலிருந்த பொதிகளை கடலில் வீசிய நிலையில்

இருவரை கைது செய்த கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா அடங்கிய பொதிகளை மீட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு