SuperTopAds

யாழில் இரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யாழில் இரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , இரத்த வாந்தி எடுத்துள்ளார். 

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.