யாழ்.அராலி - ஊரத்தி கிராமத்தில் வன்முறை கும்பல்கள் அட்டூழியம்! நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் வீசி அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலி - ஊரத்தி கிராமத்தில் வன்முறை கும்பல்கள் அட்டூழியம்! நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் வீசி அட்டகாசம்..

யாழ்.அராலி மத்தி ஊரத்தி பகுதியில் உள்ள காணிகளில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வராத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாதவர்கள் வயல்களில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தூக்கி கிணற்றில் வீசியுள்ளனர்.

காலை வேளையில் வயல் உரிமையாளர்கள் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தேடியபோது அவை கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்தமை அவதானிக்கப்பட்டது.சுமார் எட்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்ததுடன் 

இரண்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு