யாழ்.பருத்தித்துறையில் வீதியில் மயங்கி விழுந்தவர் உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் வீதியில் மயங்கி விழுந்தவர் உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், 

பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை - தும்பளையை சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும், 

பருத்தித்துறை - இமையாணன் பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 45 வயதான ஆண் ஒருவருமாக மாவட்டத்தில் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு