யாழ்.கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 10 பேர் உட்பட தென்மராட்சியில் இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 10 பேர் உட்பட தென்மராட்சியில் இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.தென்மராட்சியில் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கொடிகாமம் சந்தைத் தொகுதியில் தொற்றாளர்கள் 17 பேர் சில நாட்களில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இருந்தபோதிலும் சந்தையை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 

சந்தை வியாபாரிகள் பத்துப் பேர் மேலும் மூவர் என கொடிகாமம் பகுதியில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் எழுதுமட்டுவாள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றானா அன்டிஜன் பரிசோதனையிலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 

சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு