யாழ்.கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் கைவரிசை!

யாழ்.கொடிகாமம் - மிருசுவில் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலையில் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தாயும், மகளும் தனித்திருந்த நிலையில் வீட்டிற்குள் முகமூடி அணிந்தவாறு நுழைந்த இருவர் அவர்களை மிரட்டி 

வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு