யாழ்.பருத்தித்துறையில் இரு மதுபான சாலைகள் முடக்கப்பட்டன! சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் இரு மதுபான சாலைகள் முடக்கப்பட்டன! சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை..

யாழ்.பருத்தித்துறையில் இரு மதுபானசாலைகள் சுகாதார பிரிவினரால் சீல் வைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிராமக்கோட்டு சந்தியில் அமைந்திருந்த மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்- புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானச்சாலையுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

குறித்த மதுபானசாலையில் பணியாற்றியவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், 

மக்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு