யாழ்.மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவு! பேராபத்தில் மாவட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவு! பேராபத்தில் மாவட்டம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் 

உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். 

மேலும் அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு